எங்க ஊருல எல்லாரும் வருஷா வருஷம் கொடுமுடி, பழனி போவோம். காலையில நேரமே பழனி மலை ஏறி சாமி கும்புடுவோம். அதுனால ஒரு நாள் முன்னாடியே பழனி போய் காவடி மடத்துல தங்குவோம். பொறுப்பு நிறைய இருக்கறவங்க எல்லாரும் காவடி வேலைய செய்ய, வெட்டி பசங்க எல்லாரும் படம் பாக்க ஓடிருவோம்.
அப்படி இந்த வாரம் தடவை பார்த்த படம்
கோரிப்பாளையம். நான் பாக்கனும்னு நினைச்ச படம் "இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்". அந்த படம் எடுத்துட்டாங்கலாம். சரி என்ன படம் ஓடுதுன்னு பாக்கலாம்னு சுத்துனோம்.. சும்மா 25 பெரிய கட்-அவுட், பிளாஸ்டிக் ஹோர்டிங்-ல விஜய் அவரோட ரசிகர்களோட சிரிச்சுட்டு போஸ் குடுத்துட்டு இருந்தார். வேற என்ன? BlockBuster of the Year "
சுறா" படத்துக்குதான் இந்த விளம்பரம். அதுல
சுறா மீன் மேல விஜய் சவாரி செய்யற மாதிரி ஒன்னு. 'ஓடுங்கடா எல்லாரும்'-ன்னு தலை தெறிக்க ஓடுனோம். சினி வள்ளுவர்-ல "சுறா", வள்ளுவர்-ல "கோரிப்பாளையம்". கூட வந்த அதன பசங்களும் ரொம்ப நல்லவனுக.. 'சுறா படம் பாக்கறதுக்கு வேற எந்த படம் வேணாலும் பாக்கலாம்டா'-ன்னு சொல்ல, அதுக்கப்புறம் என்ன யோசனை? எல்லாரும் தியேட்டர்க்கு உள்ளே போய்ட்டோம். செகண்ட் ஷோ ரொம்ப கூட்டம் இல்ல.
கோரிப்பாளையம் "தூங்கா நகரம்" மதுரை பக்கத்துல ஒரு சின்ன கிராமம். அங்க இருக்க நாலு பேரோட வாழ்கை வரலாறுதான் படத்தோட கதையாம். ஹரிஷ், ராமகிருஷ்ணன் (குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் ஹீரோ), பிரகாஷ், ரகுவரன்(நம்ம ரகுவரன் இல்ல.. இது வேற) இவுங்ககூட சிங்கம் புலி. இவுங்க எல்லாருக்கும் உதவி செய்யறவர் 'காமெடி டைம்' மயில்சாமி. இந்த 4 பேரும் எல்லா நேரமும் கஞ்சா, தண்ணி மிச்ச நேரம் யார் தப்பு பண்றாங்களோ அவுங்கள அடிக்கறாங்க.. ஹரிஷ் அவங்க மாமா பொண்ண விரும்ப எல்லாரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க.. அப்புறம் அந்த பொண்ணு ஹரிஷோட நன்பரதான் காதலிச்சதா சொல்ல உடனே ஹரிஷ் தாலிய கழட்டிட்டு அவரோட நன்பர தாலி கட்ட சொல்றாரு. (எந்த ஊருலடா இருக்கீங்க?) அப்புறம் அவங்க ரெண்டு பேரும் வேற ஊருக்கு போய்டுறாங்க.
ராமகிருஷ்ணனுக்கு ஒரு பொண்ணு மேல காதல் வருது.. எப்படின்னு ரொம்ப புதுசா காட்டி இருக்காங்க. தினமும் காலையில நாயகி ஹட்ச்(Hutch) நாய்க்குட்டிய கூட்டிகிட்டு வாக்கிங் வருவாங்களாம்.. அந்த நாய் குட்டி கரக்டா ராம கிருஷ்ணன் மேலே போய் மூச்சா போகுமாம்.. அவரு கோவப்பட்டு சண்டை போட அப்புறம் ரெண்டு பேருக்கும் காதல் வருதாம். (வேற வழி இல்ல. நம்பித்தான் ஆகணும்)
அந்த ஊருல பெரிய ரௌடிங்க 2 பேர். ரவி மரியாவும் அவரோட தம்பியும்.. இவங்களுக்கு ஒரு தங்கச்சி.. இவுங்க அப்பா அலெக்ஸ். ராஜ்கபூர் ஒரு ரவுடி கும்பல் தலைவர். ஒரு பிரச்சனைல ராஜ்கபூர ஹரிஷ் க்ரூப் அடிச்சுர்றாங்க. ராஜ்கபூர் ரவி மரியாகிட்ட போய் ரவி மரியாவோட தங்கச்சியும் ஹரிஷும் காதலிக்கறதா சொல்லிடறாரு.. எதார்த்தமா இவுங்கள ரவி மரியா தியேட்டர்ல பாத்து தங்கச்சிய அடிச்சுடறாரு. ஆனா ஹரிஷுக்கு ரவி மரியாவோட தங்கச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். பண தேவைக்காக 4 பேரும் எதாவது வீட்டுல திருட முடிவு பண்ணி ஒரு வீட்டுக்குள்ள போய்டுறாங்க.. அப்புறம்தான் தெரியுது அது ரவி மரியா வீடுன்னு(அடடா!). பாதில ரவி மரியா தங்கச்சி, ஹரிஷை பாத்து கத்த எல்லாரும் ஓடி வர்றாங்க.. ரவி மரியா ஹரிஷை பாத்துடராறு.. உடனே கோவ பட்டு தங்கச்சிய கொன்னுடரராம் (ஆண்டவா). இதை வீட்டுக்குள்ள ஒளிச்சிட்டு இருந்த ராம கிருஷ்ணன் பாத்துட்டு ஹரிஷ்கிட்ட சொல்லிடறாரு.
அலெக்ஸ் இந்த 4 பேரையும் திடீர்னு பாத்து அடிக்க போக, ராம கிருஷ்ணன் தள்ளி விட கல்லுல தலை மோதி இறந்துடராறு. இதை ஆடு மேய்க்கிற ஒருத்தர் பாத்துட்டு போய் ரவி மரியாகிட்ட சொல்லிடறாரு.. ராஜ் கபூர் ரவி மரியாகிட்ட இந்த 4 பேரையும் கொல்ல விக்ராந்த்த கூட்டி வர்றாரு..
4 பேரும் தலை மறைவா சுத்துறாங்க.. சிங்கம் புலி இவுங்கள தேடி வந்து ராம கிருஷ்ணனோட காதலி கர்ப்பமா இருக்கறத சொல்லுறாரு. ஒரு மொக்கை பிளாஷ் பேக். (இந்த காலத்துல பொண்ணுங்க பேசவே யோசிக்கும் பொது வேலை இல்லாம சுத்துறவனை, படிச்ச பொண்ணு வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போடுறது அப்புறம் வரம்பு மீறுவதெல்லாம் ரொம்ப ஓவர்)
ராமகிருஷ்ணனுக்கு பொண்ணு கேக்க எல்லாரும் பொண்ணு வீட்டுக்கு போக அங்க அவங்க அப்பா அவமானப்படுத்தி அனுப்பிடறாங்க. அப்புறம் இவங்களுக்கு ஹரிஷ் கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணுறாரு. அப்புறம் சண்டை. விக்ராந்த் ராமகிருஷ்ணனை கொன்னுடறாரு.
ஹரிஷ் க்ரூப் கோவம் வந்து ரவி மரியாவை கொன்னுடறாங்க.. ராஜ்கபூர் எஸ்கேப் ஆயிடறாரு.. இதுக்குள்ள ராம கிருஷ்ணனோட அம்மா மஞ்சள் காமாலை வந்து இறந்துடறாங்க.. மயில்சாமி இதை சொல்ல விக்ராந்த் அங்கே வந்துடறாரு (செம ட்விஸ்ட்). "அண்ணே எங்க அம்மா இறந்துட்டாங்களாம் .. இப்பதான் சொன்னாங்க. 2 நிமிஷம் அழுதுக்கறேன்"-ன்னு விக்ராந்த்-கிட்ட கெஞ்ச விக்ராந்தும் பெரிய மனசோட(!!) விட்டுடறார்.. அப்புறம் அழுது முடிச்சதும் கொன்னுடறாரு.. வர்ற வழில அவரோட தம்பி விபத்துல அடி பட்டு உயிர் விடுறாரு.. விக்ராந்த் மனம் திருந்துறாராம் (ஐயோ ராமா).. ராமகிருஷ்ணனுக்கு இறுதி சடங்கு நடத்த படம் முடிஞ்சது..
சுப்ரமணியபுரம் படத்தோட வெற்றிய நம்பி அதே பார்முலாவை பயன்படுத்தி தோற்று இருக்காங்க. சுப்ரமணியபுரம் படத்துல இருந்த யதார்த்தம், நுணுக்கம் இந்த படத்துல்ல கொஞ்சம் கூட இல்ல.
மாயாண்டி குடும்பத்தார் படத்துல வந்த அதே நட்சத்திர கும்பல். ஆனாலும் சொல்லிக்கற அளவுக்கு இல்ல. சிங்கம் புலி-யோட காமெடி சில இடத்துல ஓகே. லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு ஆப்பம் விக்கிறவங்களை இந்த மாதிரி படத்துலதான் பாக்க முடியுது (கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்களோ!). அதுகூட எதோ ஒரு பாட்டுக்கு மட்டும்னா பரவால்ல, படம் பூரா அடிக்கடி வர்றது எரிச்சலாதான் இருக்கு. தேவையே இல்லாத இரட்டை அர்த்த வசனங்கள்.
மதுரை ரொம்ப பச்சை பசேல்-ன்னு காட்டி இருக்காங்க.. இருந்தாலும் நாயகிகள் பாடல் காட்சிகள்ல மொக்கை மேக்-அப் வர்றாங்க. (எங்க ஊருல நாடகம் போட்டா அதுல நடிக்கறவங்க இந்த மாதிரிதான் இருப்பாங்க) எப்படி இதை எடிட்டிங்-ல விட்டாங்க?! இளவரசு ராமகிருஷ்ணன் சின்ன வயசா இருக்கும்போது சிகரட் பத்த விக்க சொல்றது, அவர் முன்னாடியே சாராயம் குடிக்கறதுன்னு இருக்காரு.. பின்னால திடீர்னு திருந்திடறாராம்.. ரவி மரியா ரொம்ப ஓவர் அக்டிங். அலெக்ஸ், விக்ராந்த் பாவம் (புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்க சார்).
ஹரிஷ், ராமகிருஷ்ணன் நடிப்பு பரவால்ல. "என்ன இந்த மாற்றமோ", "அழகு காட்டேரி" ரெண்டு பாடலும் நல்லா இருக்கு.. "ஊஞ்சலாடி ஒய்ந்து போன" பாட்ட கேக்கும்போது கண்ணுல கண்ணீர் வந்துரும் (நிஜமாதான்).. ஆரீராரோ கேட்டதில்லை பாடலும் ஓகே.
மொத்தத்தில்
கோரிப்பாளையம் : சுப்ரமணியபுரம் காப்பி