Sunday, May 2, 2010

திரை விமர்சனம் : அங்காடி தெரு


இந்த வாரம் பாத்த படம் வசந்த பாலனின் அங்காடி தெரு. யதார்த்தமான செண்டிமெண்ட் படம்.. ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி அப்படின்னு சொல்ல முடியல.. ஆனா முக்கால்வாசி படம் நிஜ வாழ்வில் நடப்பதே.. சரி கதைக்கு வருவோம்..

படம் பிளாஷ்பாக்-ல ஆரம்பிக்குது.. ஹீரோ மகேஷ் கிராமத்துல +2 பரீட்சை எழுதிட்டு கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கார்.. அவரோட அப்பா வேலைக்கு போயிட்டு 'டெம்போ'ல வரும்போது டிரெயின் மோதி இறந்துடறார்.. அம்மா, 2 தங்கச்சி இவங்களுக்காக வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை.. அப்போ நெல்லை-ல முருகன் ஸ்டோர்ஸ்-ல வேலைக்கு ஆள் எடுக்கறாங்க.. மகேஷ்சும் அவரோட நண்பர் மாரிமுத்துவும் வேலைக்கு சேர்ந்து சென்னை போறாங்க..

அங்க அஞ்சலி குரூப். மோதல் அப்புறம் காதல்..(என்னா ரைமிங்!!) அந்த கடைல இவங்களுக்கு சூப்பர்வைசர் A. வெங்கடேஷ் (இவருதான் வில்லன்).. சௌந்திர பாண்டி செல்வ ராணிக்கு காதல் கடிதம் எழுதி ரெண்டு பேரும் மாட்டிக்கிறாங்க.. வெங்கடேஷ் அடிக்க சௌந்திர பாண்டி, "நான் இவள காதலிக்கவே இல்ல"-நு சொல்லி திட்டிடறாரு.. உடனே செல்வராணி பில்டிங்-ல இருந்து கீழ குதிச்சு இறந்துடறாங்க.. இங்கதான் இடை வேளை..

கடை முதலாளி அண்ணாச்சி எல்லாரையும் திட்டி அதிகாரிங்களை பணம் கொடுத்து சரி கட்டிடராரு.. மகேஷ் அஞ்சலிய விட்டு விலக பார்க்க, மாரிமுத்து (மகேஷ் நண்பர்) அஞ்சலிகிட்ட சொல்லிடறார்.. அப்புறம் மகேஷ் மன்னிப்பு கேக்கறாரு.. அஞ்சலியோட தங்கச்சிக்கு மகேஷ் சுடிதார் வாங்கி தரார்(விசேஷம்தான்).. அஞ்சலியும் மகேஷும் வெங்கடேஷ்-கிட்ட மாட்டிகிறாங்க.. அப்புறம் போலீஸ்-கிட்ட மாட்டி அடி வாங்கி வெளிய வர்றாங்க.. வேலை தேடி அலைஞ்சு கடைசீல ஒரு பெரியவர்கிட்ட பொருள் எல்லாம் வாங்கி விக்கறாங்க..

ரோட்டோரமா தூங்கும்போது ஒரு லாரி வந்து மோதிடுது.. அதுல அஞ்சலியோட ரெண்டும் காலும் அடிபட்டுடுது.. அவர பாக்க வர்ற அஞ்சலியோட அப்பா சொல்லாமலே கிளம்பிடுராறு.. மகேஷ் அஞ்சலிய கல்யாணம் பண்ணி ரெண்டு பேரும் சேர்ந்து பொருள் விக்கறாங்க..

இது ரொம்ப புதுசான கதை-ன்னு சொல்ல முடியாது. ஆனா பெரிய ஸ்டோர்ஸ்-ல என்ன நடக்குதுன்னு இதுவரைக்கும் பாக்காதத/தெரியாதத சொல்லி இருக்காங்க. மாரிமுத்து, அண்ணாச்சி கேரக்டர் ஓகே (யதார்த்தம்!?@). செல்வராணி காதலரா வர்ற சௌந்திர பாண்டி கடைசீல அவர நினைச்சு புலம்பறது நம்மள கண் கலங்க வைக்குது. டைரக்டர் வசந்த பாலன் இதுதான் சான்ஸ்-நு வெங்கடேஷை நல்லா பழி வாங்கிட்டார்.

படத்துல இடையில சின்ன சின்ன நிஜ சம்பவங்கள கோர்த்து இருக்காங்க. அஞ்சலி, வெங்கடேஷ் தவிர மத்தவங்க எல்லாம் புதுசு. + விஜய் ஆன்டனி மியூசிக் படத்துக்கு பெரிய பலம்.. பாட்டு எல்லாம் சூப்பர்.. (கதைகளை பேசும் விழி அருகே, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை இரண்டும் என்னோட பேவரிட்)

அவ்வளவு பெரிய கடைல எல்லார் முன்னாடியும் வெங்கடேஷ் வேலை செய்யறவங்கள திட்றதும் அடிக்கறதும் கொஞ்சம்(ரொம்பவே) ஓவரா தெரியுது.. (நான் அப்படி எங்கயும் பாத்தது இல்ல. அதான்)

மொத்ததுல அங்காடி தெரு ரொம்ப நல்ல படம்தான்.. ஆனா ரேனிகுண்டா, சுப்ரமணியபுரம், கற்றது தமிழ், பருத்தி வீரன் அளவுக்கு இல்ல..

No comments: