Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts
Sunday, May 2, 2010
திரை விமர்சனம் : அங்காடி தெரு
இந்த வாரம் பாத்த படம் வசந்த பாலனின் அங்காடி தெரு. யதார்த்தமான செண்டிமெண்ட் படம்.. ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி அப்படின்னு சொல்ல முடியல.. ஆனா முக்கால்வாசி படம் நிஜ வாழ்வில் நடப்பதே.. சரி கதைக்கு வருவோம்..
படம் பிளாஷ்பாக்-ல ஆரம்பிக்குது.. ஹீரோ மகேஷ் கிராமத்துல +2 பரீட்சை எழுதிட்டு கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கார்.. அவரோட அப்பா வேலைக்கு போயிட்டு 'டெம்போ'ல வரும்போது டிரெயின் மோதி இறந்துடறார்.. அம்மா, 2 தங்கச்சி இவங்களுக்காக வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை.. அப்போ நெல்லை-ல முருகன் ஸ்டோர்ஸ்-ல வேலைக்கு ஆள் எடுக்கறாங்க.. மகேஷ்சும் அவரோட நண்பர் மாரிமுத்துவும் வேலைக்கு சேர்ந்து சென்னை போறாங்க..
அங்க அஞ்சலி குரூப். மோதல் அப்புறம் காதல்..(என்னா ரைமிங்!!) அந்த கடைல இவங்களுக்கு சூப்பர்வைசர் A. வெங்கடேஷ் (இவருதான் வில்லன்).. சௌந்திர பாண்டி செல்வ ராணிக்கு காதல் கடிதம் எழுதி ரெண்டு பேரும் மாட்டிக்கிறாங்க.. வெங்கடேஷ் அடிக்க சௌந்திர பாண்டி, "நான் இவள காதலிக்கவே இல்ல"-நு சொல்லி திட்டிடறாரு.. உடனே செல்வராணி பில்டிங்-ல இருந்து கீழ குதிச்சு இறந்துடறாங்க.. இங்கதான் இடை வேளை..
கடை முதலாளி அண்ணாச்சி எல்லாரையும் திட்டி அதிகாரிங்களை பணம் கொடுத்து சரி கட்டிடராரு.. மகேஷ் அஞ்சலிய விட்டு விலக பார்க்க, மாரிமுத்து (மகேஷ் நண்பர்) அஞ்சலிகிட்ட சொல்லிடறார்.. அப்புறம் மகேஷ் மன்னிப்பு கேக்கறாரு.. அஞ்சலியோட தங்கச்சிக்கு மகேஷ் சுடிதார் வாங்கி தரார்(விசேஷம்தான்).. அஞ்சலியும் மகேஷும் வெங்கடேஷ்-கிட்ட மாட்டிகிறாங்க.. அப்புறம் போலீஸ்-கிட்ட மாட்டி அடி வாங்கி வெளிய வர்றாங்க.. வேலை தேடி அலைஞ்சு கடைசீல ஒரு பெரியவர்கிட்ட பொருள் எல்லாம் வாங்கி விக்கறாங்க..
ரோட்டோரமா தூங்கும்போது ஒரு லாரி வந்து மோதிடுது.. அதுல அஞ்சலியோட ரெண்டும் காலும் அடிபட்டுடுது.. அவர பாக்க வர்ற அஞ்சலியோட அப்பா சொல்லாமலே கிளம்பிடுராறு.. மகேஷ் அஞ்சலிய கல்யாணம் பண்ணி ரெண்டு பேரும் சேர்ந்து பொருள் விக்கறாங்க..
இது ரொம்ப புதுசான கதை-ன்னு சொல்ல முடியாது. ஆனா பெரிய ஸ்டோர்ஸ்-ல என்ன நடக்குதுன்னு இதுவரைக்கும் பாக்காதத/தெரியாதத சொல்லி இருக்காங்க. மாரிமுத்து, அண்ணாச்சி கேரக்டர் ஓகே (யதார்த்தம்!?@). செல்வராணி காதலரா வர்ற சௌந்திர பாண்டி கடைசீல அவர நினைச்சு புலம்பறது நம்மள கண் கலங்க வைக்குது. டைரக்டர் வசந்த பாலன் இதுதான் சான்ஸ்-நு வெங்கடேஷை நல்லா பழி வாங்கிட்டார்.
படத்துல இடையில சின்ன சின்ன நிஜ சம்பவங்கள கோர்த்து இருக்காங்க. அஞ்சலி, வெங்கடேஷ் தவிர மத்தவங்க எல்லாம் புதுசு. + விஜய் ஆன்டனி மியூசிக் படத்துக்கு பெரிய பலம்.. பாட்டு எல்லாம் சூப்பர்.. (கதைகளை பேசும் விழி அருகே, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை இரண்டும் என்னோட பேவரிட்)
அவ்வளவு பெரிய கடைல எல்லார் முன்னாடியும் வெங்கடேஷ் வேலை செய்யறவங்கள திட்றதும் அடிக்கறதும் கொஞ்சம்(ரொம்பவே) ஓவரா தெரியுது.. (நான் அப்படி எங்கயும் பாத்தது இல்ல. அதான்)
மொத்ததுல அங்காடி தெரு ரொம்ப நல்ல படம்தான்.. ஆனா ரேனிகுண்டா, சுப்ரமணியபுரம், கற்றது தமிழ், பருத்தி வீரன் அளவுக்கு இல்ல..
Labels:
Movie Review,
Tamil,
அங்காடி தெரு,
தமிழ் சினிமா,
திரை விமர்சனம்
Friday, April 30, 2010
திரை விமர்சனம் : பையா

வழக்கம் போல தாராபுரம் சத்யா தியேட்டர்.. படம் : பையா.. அளவான கூட்டம்..
YSR பாட்டு எல்லாம் நல்லா இருந்துச்சு.. படமும் நல்லா இருக்கும்னு தான் நானும் டைரக்டர் தம்பியும் போனோம்.. இப்போல்லாம் தியேட்டர்ல ரீல் இல்ல.. எல்லாம் சாட்டிலைட் தானாம்.. என்னமோ போங்க.. மொக்கை படத்த எதுல பாத்தா என்ன?
டைட்டில் எல்லாம் சூப்பர்-ஆ இருந்துச்சு.. transporter காப்பி.. 4 சாப்ட்வேர் இஞ்சினியர்.. ஒரு பொண்ணு.. பெங்களூர்-ல டிராம் பஸ்ல போறாங்களாம்.. (நானும் 4 வருஷமா பெங்களூர்-ல இருக்கேன்.. அப்படி ஒரு பஸ் கூட பாத்தது இல்ல..) சரி விடுங்க.. போனா போகுது.. அந்த பொண்ணு "அவன் நிக்குற பஸ்ல ஏற மாட்டானாம்.".. "அவன்"? வேற யாரு.. நம்ம ஹீரோ கார்த்திக் தான்.. ஓடி வந்து பஸ்-ல ஏறுறாரு.. தமன்னா அதே பஸ்ல இருந்து இறங்குறாங்க.. பாத்ததும் அழகுல மயங்கிடுறாரு.. (கடவுளே)
கார்த்திக்கும் பிரண்ட்சும் டிரஸ் வாங்க போறாங்க.. அங்க லிப்ட்-ல தமன்னா... அடுத்த நாலா இன்டர்வியுக்கு போறாரு.. அங்க மறுபடியும் தமன்னா.. (டேய்!!) வேற என்ன இன்டர்வியு காலி.. வழக்கம் போல ஒரு பாட்டு.. (உஷ் ஓவரா கண்ண கட்டுதே)
கார்த்திக் பிரண்ட் டாக்ஸி ஏஜன்சி நடத்துறவர கூட்டிட்டு வர ரயில்வே ஸ்டேஷன் போறார் கார்த்திக்.. அங்க தமன்னா சென்னை போகுற டிரெயின் டிக்கெட்ட தொலைச்சுட்டு வில்லன்-கூட சுத்துறாங்க.. கார்த்திக்-கிட்ட வந்து சென்னை போக கூப்பிடுறாங்க.. கார்த்திக் வேண்டாம்னா சொல்லுவாரு.. கிளம்புறாங்க.. பாதில வில்லன்-ந விட்டுட்டு தமண்ணா கிளம்ப சொல்ல கார்த்திக் சந்தோசமா கிளம்புறாரு.. தமன்னா மும்பை கூட்டிட்டு போக சொல்லறாங்க.. வழி-ல யாருக்கோ ரிப்பேர் ஆன வண்டிய சரி பண்ணி தர்றாரு.. குழந்தைகளுக்கு ஐஸ் வாங்கி தர்றாரு.. (அட ஆமாங்க..) தமண்ணா உடனே அவங்க கதைய சொல்றாங்க..
அதாவது தமண்ணா அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு தமன்னாவ வில்லனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ண தமன்னா அதுல இருந்து தப்பிச்சு மும்பை-ல பாட்டி வீட்டுக்கு போறாங்க.. வழில தமன்னா அப்பா ஆளுங்க குறுக்க வர கார்த்திக் அடி பின்றாரு.. (அதிகமில்ல ஜென்டில்மென். ஜஸ்ட் 25 பேருதான்!!)
கார்ல போகும்போது மழை வருது.. வேற வழி இல்லாம இன்னொரு பாட்டு.. (சூப்பர் ஏரியா, சூப்பர் கேமரா.)
இதுல இன்னொரு க்ரூப் வேற.. கார்த்திக்கோட பிளாஷ் பேக்.. (மும்பைல வில்லன அடிச்சுட்டு பெங்களூர் வந்துறாரு..) மறுபடி சண்டை.. (ஆவ்வ்) 25 பேரையும் கார்த்திக் மிச்சம் வைய்க்காம அடிக்கறாரு..(சபாஷ்)
நைட்டு ஆயுடுது.. தமன்னாவ தேடி வந்த வில்லனுங்க தொரத்துறாங்க.. காட்டுக்குள்ள 10 அடி தூரத்துல வில்லனோட ஆளுங்க தேடி பாத்துட்டு திரும்பி போய்டுறாங்க..(உலக அதிசயம்).. கார்த்திக் பாட்டு பாடுறாரு.. (அந்த மாதிரி செட்டு உலகத்துல எங்கயும் பாக்க முடியாது..)
கடைசீல மும்பை போய் சேர்ந்துறாங்க.. அங்க தமன்னா பாட்டி வீட்டுல தமன்னா திட்டி அனுப்பிர்றாங்க.. இதுக்குள்ள கார்த்திக் ரொம்ப பீல் பண்ணி ஊருக்கு கிளம்புறாரு.. போற வழில தமன்னா நிக்கறாங்க.. கதைய சொல்றாங்க..
கிளைமாக்ஸ்ல ரெண்டு வில்லன் குரூப்பும் சேர்ந்துக்கறாங்க.. மிலிந்த் சோமன் இரும்பு கம்பில அடி பின்னிடுராறு.. அதுக்கு அப்புறம் கார்த்திக் எல்லாரையும் அடிச்சு தள்றாரு. (காதுல பூ வாசம் ஓவரா மனக்குதுங்க.. கொஞ்சமாவது லாஜிக் வேணாம்).
"இனிமே யாராவது குறுக்க வந்தீங்கன்னா தொலைச்சுருவன்"-னு ஒரு உலக மகா டயலாக்க சொல்லிட்டு கிளம்புறாரு.. வழில பெங்களூர் நண்பர் குரூப் அவர தேடி மும்பை வர்றாங்க.. அவங்க கார்த்திக் அடிச்ச லூட்டி பத்தி சொல்ல தமன்னா கார்த்திக் லவ் பண்றத தெரிஞ்சுக்கறாங்க.. (அப்புறம்.. அப்புறம்.. அட போங்க.. நான் வீட்டுக்கு போக வேணாம்?)
லிங்கு சாமியோட தீபாவளி படத்துக்கும் இதுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்ல..
எனக்கு பிடிச்சது டைட்டில்-உம், பாடல்களும் (ஒன்லி ஆடியோ)..
மொத்தத்தில் : பையா - கார்த்திக் காலி..
Labels:
Movie Review,
Tamil,
தமிழ் சினிமா,
திரை விமர்சனம்,
பையா
Tuesday, January 20, 2009
திரை விமர்சனம் : வில்லு
எங்க ஊர்ல இருக்கறதே 3 தியேட்டர்.. பொங்கலுக்கு எந்த படத்துக்கு போலாம்னு கொஞ்சம் கண்பியுசன்.. வில்லு, படிக்காதவன்-ல, "வில்லு" போய் பாக்கலாம்னு கிளம்பிட்டோம்.. பாட்டெல்லாம் நல்லா இருக்கே, பிரபுதேவா கொஞ்சம் நல்லா பண்ணுவார்னு நம்பி போனோம்.. டைட்டில் முழுக்க MGR பாட்டை வெச்சி முடிச்சிட்டாங்க..தாமு முதல் சீன்ல வந்து பாட்டிகிட்ட பேட்டி எடுக்கிறார்.. (ஹீரோ Intro) தமிழ் சினிமா விதிப்படி விஜய் வந்து 4 வில்லன்களிடமிருந்து ஒரு பொண்ணை காப்பாத்துறார் (இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சார் இந்த சீன் வைப்பீங்க?).. "ஸ்பைடர் மேனா? சூப்பர் மேனா? போக்கிரி மேன்.." (டயலாக்)வழக்கம் போல பாட்டு.. குஸ்பூ மாஸ்டர்!? வேற வந்து ஸ்க்ரீன் பூரா அடுறாங்கன்னா..
அப்புறம் போலீஸ் டாப் சீக்ரட் கேஸ் ஓபன் ஆகுது.. இன்டர்நேஷனல் வில்லன் தமிழ்நாட்டு கப்பல்ல வர்றார்..போலீஸ் அவரை ரவுண்ட் அப் பண்ணுறாங்க.. விஜய் போலீஸ்கிட்ட இருந்து அவர காப்பாத்தி கடலுக்குள்ள கூட்டிட்டு போறார்.. அப்புறம் தன்னோட நண்பர்கிட்ட (போலீஸ்) அவரை ஒப்படைக்கிறார்.. விஜய் லேப்டாப்-ல எதோ மெயில் படிக்கிறார்.. அப்புறம் ஒரு கிராமத்துக்கு கல்யாணத்துக்கு கிளம்புறார்.
வடிவேல் என்ட்ரி(அப்பாடா.. வந்துட்டான்யா.. வந்துட்டான்) கொஞ்ச நேரம் காமெடி.. அப்புறம் நயன்தாரா விஜய் கூட மோதல் அப்புறம் காதல்-ன்னு விழறாங்க (ஆவ்வ்..) வழக்கம் போல ஒரு டூயட்.. ரெண்டு பெரும் நயன்தாரா அப்பா பிரகாஷ் ராஜ்-கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க முனிச் (ஜெர்மனி) போறாங்க.. அங்க பிரகாஷ் ராஜ் அவரோட நண்பர்(தேவராஜ்)-கூட (ராக்கா) மாட்டிகிட்டதுக்கு சண்டை போடுறார், அப்புறம் சேர்ந்துக்கறார்.. விஜய் பிரகாஷ் ராஜ்-கிட்ட ராக்கா-வை நான்தான் கொன்னேன்-ன்னு சொல்றார் (போலீஸ்-கிட்ட ராக்காவோட பாடியே கிடைக்காம எப்படித்தான் ராக்கா செத்துட்டார்ன்னு எல்லாரும் நம்புறாங்க-ன்னு தெரியல).. விஜய், ரவுடி-ங்கள (ஸ்ரீமன், ஆனந்த ராஜ்) அடிக்கறார்.. தேவராஜ், விஜயை சுட்டு கொல்ல கிளம்புறார். அங்க அவரோட மனைவிய(விஜயோட அம்மா) பாக்குறார்.. அப்புறம் எல்லாரும் சேர்ந்துக்கறாங்க..
விஜயோட அப்பா அவரை ஒரு தீவுக்கு கூட்டி போய் ஒரு blue ray disk-a தர்றார்.. அதுல பிரகாஷ் ராஜோட எல்லா விஷயமும் இருக்காம்.. அதே மாதிரி இவரை பத்தின ஒரு டிஸ்க் தேவராஜ் கிட்ட இருக்கு..
தீவுல இருந்து வரும்போது தேவராஜ் பெரிய பாறை-ல மோதி மண்டைய போடுறார்.. அதுக்குள்ளே விஜய் அப்பாவ விட்டுட்டு பாராசூட்டோட கடல்ல குதிச்சு தப்பிக்கிறார்.. அதே நேரம் நயன்தாரா அங்க படகுல வர்றாங்க.. (அவ்ளோ பெரிய அக்சிடன்ட், அவ்வளவு பக்கத்துல இருந்தும் நயன்தாராவுக்கு எப்படி தெரியாம போச்சுன்னு யார போய் கேக்குறது?)
அந்த blue ray டிஸ்க்-எ பிரகாஷ் ராஜ்கிட்ட தர்றார் விஜய்.. அப்புறம் நயந்தாரவ கல்யாணம் பண்ணி தர சொல்றார்.. இதை பார்த்த நயன்தாரா, ஓடி போய் விஜய் அம்மாகிட்ட இவரை பத்தி சொல்ல அந்த அம்மா ஆரம்பிக்குது பாருங்க ஒரு பிளாஸ்பேக் தமிழ் திரை உலக வரலாறுல அப்படி ஒன்ன யாரும் பாத்து இருக்க முடியாது..
விஜயோட உண்மையான அப்பா மேஜர் சரவணன் (வேற யாரு விஜய்தான்) ஒரு நேர்மையான ஆர்மி ஆபீசர். (என்னால சிரிப்ப அடக்கவே முடியலீங்கன்னா - அவர பாத்தா சிரிப்பு போலீஸ் மாதிரியே இருக்கு..) அவரோட மனைவி ரஞ்சிதா, மகன் விஜய். ஒரு ஆப்ரேசன்ல பெருசா?! சண்டை போட்டு ஒரு கூட்டத்த காப்பத்துறார் (எத்தன தடவைதான் இதவே பாக்குறது)..
விஜய் தலைமைல ஆயுதம்-லாம் ஒரு வண்டில கொண்டு போறாங்க.. வழில பிரகாஷ் ராஜ், சம்பத், மலைகோட்டை வில்லன் மூணு பேரும் விஜய் அடிச்சிட்டு ஆயுதத்த கடத்துறாங்க. விஜய்-எ கொலை பண்ணுறாங்க.. போலீஸ்-கிட்ட விஜய்தான் ஆயுதம் கடத்துனதா சொல்லிடறாங்க.. விஜய் மேல தேச துரோகி குற்றம் சாத்துறாங்க.. ரஞ்சிதாவ கொடுமை படுத்துறாங்க.. ரஞ்சிதா விஜய்-எ இந்த பிளாஷ்பேக் சொல்ற அம்மாகிட்ட கொடுத்து வளர்த்த சொல்றாங்க.. கடைசீல மகன் விஜய் பிரகாஷ் ராஜ் தவிர மத்த இரண்டு பேரையும் கொன்னுட்டு பிரகாஷ் ராஜ ரஞ்சிதாகிட்ட கூட்டிட்டு வர்றார்.. நடுவுல முதல் சீன்ல கடத்துன வில்லன் போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சு வர்றார்.. விஜய் அவரையும் கொன்னுடறார்..
அப்புறம் பிரகாஷ் ராஜ அடிச்சு ஊர் மக்கள் முன்னாடி உண்மைய சொல்ல வைக்கிறார்.. கடைசீல அவரையும் கொன்னுடறார்.. அவ்ளோதானாம் படம் முடிஞ்சிருச்சாம்.. நயன்தாரா என்ன ஆனாங்கன்னே தெரியலைங்கன்னா (ரொம்ப முக்கியம்!!)
படம் ரொம்ப சுமார்.. வடிவேலு கொஞ்சம் நேரம்தான் வர்றார்.. காமெடி ஒன்னும் பெருசா இல்ல.. கிராமத்துல மைக் செட்டு கட்டுரவர் எப்படி ஜெர்மனி வர்றார்-ன்னு பிரபு தேவா-கிட்ட யாராவது கேட்டு சொல்லுங்க..
பாடல்கள் எல்லாம் சூப்பர்.. நடனம் பாக்கலாம் (நயன்தாராவையும்).. படம் போக்கிரி, கில்லி அளவுக்கு இல்லைனாலும் குருவி, அழகிய தமிழ் மகனுக்கு பரவால்ல..
பிரபு தேவா கொஞ்சம் உஷாராகனும்.. போக்கிரி சாயல் நிறைய இடத்துல தெரியுது.. பிரகாஷ் ராஜ், ஆனந்த ராஜ், வடிவேல் இவங்களை எல்லாம் இன்னும் கொஞ்சம் நல்லா பயன்படுத்தி இருக்கலாம்..
மொத்தத்தில் வில்லு - ஒரு தடவை பார்க்கலாம்..
அடுத்த பதிப்பில் சந்திப்போம்..
Labels:
Movie Review,
Tamil,
தமிழ்,
தமிழ் சினிமா,
திரை விமர்சனம்
Friday, January 9, 2009
திரை விமர்சனம் : சசியின் "பூ"
கடந்த வாரம் சசியின் "பூ" படம் பார்த்தேன்..
அடுத்த நாள் ஆபீஸ் போகணும், இருந்தாலும் பரவால்ல படம் பாத்துடுவோம்னு எங்க சீனியர்ஸ்கூட பாத்தேன்..
படம் நாயகி (பார்வதி) பிளாஷ் பேக் சொல்லுற மாதிரி ஆரம்பிக்குது.. கதைப்படி நாயகி (பார்வதி) அவங்க மாமவ (ஸ்ரீகாந்த்) சின்ன வயசுல இருந்து எக்கச்சக்கமா லவ் பண்ணுது.. ஸ்ரீகாந்த் இன்ஜினியரிங் படிக்கிறார்.. பார்வதி பட்டாசு பாக்டரில வேலை செய்யுது.. ஸ்ரீகாந்த் படிச்சு முடிச்சிட்டு ஊருக்கு வர்றார்.
ஸ்ரீகாந்தோட கிளாஸ்மேட், பார்வதி காதலிக்கரத ஸ்ரீகாந்த் கிட்ட சொல்லிடுது.. நடுவுல ஸ்ரீகாந்த் அவரோட நண்பர் வீட்டுக்கு போறார். அங்க அவரோட குழந்தைய பாக்குறார்.. மாமா பொண்ண கல்யாணம் பண்ணதால அந்த குழந்தை மனநிலை சரியில்லாம இருக்கு.. (ட்விஸ்ட்)
பார்வதிய கல்யாணம் பண்ணா இந்த மாதிரி ஆயிடுமோன்னு பயப்படறார்..
அவங்க அப்பா அவர தன்னோட முதலாளி பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்றார் (பணம் சார் பணம்). ஸ்ரீகாந்த் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிடறார்.. ஸ்ரீகாந்தோட அப்பா, மகன் தன்னை திட்டிட்டானே.. கனவெல்லாம் வீணாயிடுச்சேன்னு சரக்கு அடிச்சிட்டு தண்ணில விழறார்.. அப்புறம் அவர வீட்டுக்கு கூட்டி வந்து மருத்துவம் பாக்குறாங்க.. ஸ்ரீகாந்த் வேற வழி இல்லாம (தெரியல) அந்த முதலாளி பொன்னையே கல்யாணம் பண்ணிக்கறார்.
பார்வதியோட அண்ணன் பார்வதிக்கு ஒரு மளிகை கடைக்காரர கல்யாணம் பண்ணி வைக்கிறார். அவரும் பார்வதிய நல்ல பாத்துகிறார்..
பார்வதி ஊருக்கு வந்த ஸ்ரீகாந்த பாக்க போகுது.. அங்க அந்த புது பொண்ணு ஸ்ரீகாந்த கொஞ்சம் கூட மதிக்கறதே இல்லைங்கரத தெரிஞ்சுக்குது..
கடைசீல தங்கராசு (வேற யாரு ஸ்ரீகாந்த்தான்) வாழ்க்கை இப்படி போய்டுச்சேனு பயங்கரமா அழுவுது.. வெளிய ஸ்ரீகாந்தோட அப்பா பார்வதிய பாத்து அழறார்..
கேமரா, படம் முழுக்க பார்வதியவே சுத்தி சுத்தி வருது.. அதுவும் ஸ்ரீகாந்த வெறித்தனமா காதலிக்கறது சிலருக்கு யதார்த்தமா இருக்கலாம்.. எனக்கு கொஞ்சம் எரிச்சலாதான் இருந்திச்சு.. (யாருப்பா அது "வயித்தெரிச்சலா"-ன்னு கேக்குறது? என் மாமா பொண்ணு பார்வதியவிட அழகா இருப்பா..)
ஸ்ரீகாந்த் மொத்த படத்துல 15 நிமிசம் கூட வரல.. ஓரமா வந்துட்டு போய்டுறார்.. பாவம் நடிக்க சந்தர்ப்பமே இல்ல.. பார்வதி நடிப்பு சூப்பர்.. "ஆவாரம் பூ" பாடல் நல்லா இருக்கு.. பருத்தி வீரன் படத்தோட சாயல் நிறைய இடத்தில் தெரியுது...
எனக்கு பிடிச்ச சீன் : வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் ஸ்ரீகாந்த பாக்குறதுக்கு பார்வதி காத்திருக்கு.. அப்போ அதோட தோழி "இன்னுமா நீ தங்கராச மறக்கலன்னு?" கேக்குறதுக்கு "எதுக்கு மறக்கணும்?"ன்னு கேக்குறது மறக்க முடியாத காட்சி..
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பணக்காரங்க எல்லாம் மத்தவங்கள மதிக்க மாட்டாங்க.. ஏழைங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டு இருப்பாங்கன்னு தெரியலைங்க..
இந்த படத்துல என்ன மெசேஜ் சொல்ல வர்றாங்கன்னு புரியவே இல்ல.. (புரிஞ்சு மட்டும் என்ன பண்ண போறோம்?) அத்தை பொண்ண கல்யாணம் பண்ண கூடாதா? பணக்கார வீட்டு பொண்ண கல்யாணம் பண்ண கூடாதா?
எனக்கு புரிஞ்சது, "அப்பா சொல்றாங்கன்னு, வசதியான பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டா.. வசதி வரும்.. ஆனா வாழ்க்கை போய்டும்"..
மொத்தத்தில் "பூ" - கிராமத்து பூ - சிலருக்கு பிடிக்கும்..
அடுத்த பதிப்பில் சந்திப்போம்..
அடுத்த நாள் ஆபீஸ் போகணும், இருந்தாலும் பரவால்ல படம் பாத்துடுவோம்னு எங்க சீனியர்ஸ்கூட பாத்தேன்..
படம் நாயகி (பார்வதி) பிளாஷ் பேக் சொல்லுற மாதிரி ஆரம்பிக்குது.. கதைப்படி நாயகி (பார்வதி) அவங்க மாமவ (ஸ்ரீகாந்த்) சின்ன வயசுல இருந்து எக்கச்சக்கமா லவ் பண்ணுது.. ஸ்ரீகாந்த் இன்ஜினியரிங் படிக்கிறார்.. பார்வதி பட்டாசு பாக்டரில வேலை செய்யுது.. ஸ்ரீகாந்த் படிச்சு முடிச்சிட்டு ஊருக்கு வர்றார்.
ஸ்ரீகாந்தோட கிளாஸ்மேட், பார்வதி காதலிக்கரத ஸ்ரீகாந்த் கிட்ட சொல்லிடுது.. நடுவுல ஸ்ரீகாந்த் அவரோட நண்பர் வீட்டுக்கு போறார். அங்க அவரோட குழந்தைய பாக்குறார்.. மாமா பொண்ண கல்யாணம் பண்ணதால அந்த குழந்தை மனநிலை சரியில்லாம இருக்கு.. (ட்விஸ்ட்)
பார்வதிய கல்யாணம் பண்ணா இந்த மாதிரி ஆயிடுமோன்னு பயப்படறார்..
அவங்க அப்பா அவர தன்னோட முதலாளி பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்றார் (பணம் சார் பணம்). ஸ்ரீகாந்த் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிடறார்.. ஸ்ரீகாந்தோட அப்பா, மகன் தன்னை திட்டிட்டானே.. கனவெல்லாம் வீணாயிடுச்சேன்னு சரக்கு அடிச்சிட்டு தண்ணில விழறார்.. அப்புறம் அவர வீட்டுக்கு கூட்டி வந்து மருத்துவம் பாக்குறாங்க.. ஸ்ரீகாந்த் வேற வழி இல்லாம (தெரியல) அந்த முதலாளி பொன்னையே கல்யாணம் பண்ணிக்கறார்.
பார்வதியோட அண்ணன் பார்வதிக்கு ஒரு மளிகை கடைக்காரர கல்யாணம் பண்ணி வைக்கிறார். அவரும் பார்வதிய நல்ல பாத்துகிறார்..
பார்வதி ஊருக்கு வந்த ஸ்ரீகாந்த பாக்க போகுது.. அங்க அந்த புது பொண்ணு ஸ்ரீகாந்த கொஞ்சம் கூட மதிக்கறதே இல்லைங்கரத தெரிஞ்சுக்குது..
கடைசீல தங்கராசு (வேற யாரு ஸ்ரீகாந்த்தான்) வாழ்க்கை இப்படி போய்டுச்சேனு பயங்கரமா அழுவுது.. வெளிய ஸ்ரீகாந்தோட அப்பா பார்வதிய பாத்து அழறார்..
கேமரா, படம் முழுக்க பார்வதியவே சுத்தி சுத்தி வருது.. அதுவும் ஸ்ரீகாந்த வெறித்தனமா காதலிக்கறது சிலருக்கு யதார்த்தமா இருக்கலாம்.. எனக்கு கொஞ்சம் எரிச்சலாதான் இருந்திச்சு.. (யாருப்பா அது "வயித்தெரிச்சலா"-ன்னு கேக்குறது? என் மாமா பொண்ணு பார்வதியவிட அழகா இருப்பா..)
ஸ்ரீகாந்த் மொத்த படத்துல 15 நிமிசம் கூட வரல.. ஓரமா வந்துட்டு போய்டுறார்.. பாவம் நடிக்க சந்தர்ப்பமே இல்ல.. பார்வதி நடிப்பு சூப்பர்.. "ஆவாரம் பூ" பாடல் நல்லா இருக்கு.. பருத்தி வீரன் படத்தோட சாயல் நிறைய இடத்தில் தெரியுது...
எனக்கு பிடிச்ச சீன் : வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் ஸ்ரீகாந்த பாக்குறதுக்கு பார்வதி காத்திருக்கு.. அப்போ அதோட தோழி "இன்னுமா நீ தங்கராச மறக்கலன்னு?" கேக்குறதுக்கு "எதுக்கு மறக்கணும்?"ன்னு கேக்குறது மறக்க முடியாத காட்சி..
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பணக்காரங்க எல்லாம் மத்தவங்கள மதிக்க மாட்டாங்க.. ஏழைங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டு இருப்பாங்கன்னு தெரியலைங்க..
இந்த படத்துல என்ன மெசேஜ் சொல்ல வர்றாங்கன்னு புரியவே இல்ல.. (புரிஞ்சு மட்டும் என்ன பண்ண போறோம்?) அத்தை பொண்ண கல்யாணம் பண்ண கூடாதா? பணக்கார வீட்டு பொண்ண கல்யாணம் பண்ண கூடாதா?
எனக்கு புரிஞ்சது, "அப்பா சொல்றாங்கன்னு, வசதியான பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டா.. வசதி வரும்.. ஆனா வாழ்க்கை போய்டும்"..
மொத்தத்தில் "பூ" - கிராமத்து பூ - சிலருக்கு பிடிக்கும்..
அடுத்த பதிப்பில் சந்திப்போம்..
Monday, October 29, 2007
Latest Tamil Songs
Latest Tamil Songs avail in Couple of Websites..
தமிழ் பாடல்கள் உங்களுக்காக ..
Here some of the Websites I Prefer..
http://www.tamilbeat.com/
http://www.mohankumars.com/
http://www.tamilvennila.com/
http://www.tamilscreen.net/
http://www.raaga.com/ [Only hear songs not for download]
Enjoy..
Regards,
Venkatx5
தமிழ் பாடல்கள் உங்களுக்காக ..
Here some of the Websites I Prefer..
http://www.tamilbeat.com/
http://www.mohankumars.com/
http://www.tamilvennila.com/
http://www.tamilscreen.net/
http://www.raaga.com/ [Only hear songs not for download]
Enjoy..
Regards,
Venkatx5
Best Photography Guide in TAMIL
Hai,
I enjoyed a Blog for Photography..
If you know Tamil this will help you more.. http://photography-in-tamil.blogspot.com/
Regards,
Venkatx5
I enjoyed a Blog for Photography..
If you know Tamil this will help you more.. http://photography-in-tamil.blogspot.com/
Regards,
Venkatx5
Thursday, March 8, 2007
Tamil MP3
Hai.. I used to visit Tamil MP3 Site which has huge collection of Tamil Songs and Forum.. Visit : http://www.germantamil.net/
http://www.mp3world.com/
Enjoy..
Subscribe to:
Posts (Atom)

Movie Review