Friday, January 9, 2009

திரை விமர்சனம் : சசியின் "பூ"

கடந்த வாரம் சசியின் "பூ" படம் பார்த்தேன்..
அடுத்த நாள் ஆபீஸ் போகணும், இருந்தாலும் பரவால்ல படம் பாத்துடுவோம்னு எங்க சீனியர்ஸ்கூட பாத்தேன்..

படம் நாயகி (பார்வதி) பிளாஷ் பேக் சொல்லுற மாதிரி ஆரம்பிக்குது.. கதைப்படி நாயகி (பார்வதி) அவங்க மாமவ (ஸ்ரீகாந்த்) சின்ன வயசுல இருந்து எக்கச்சக்கமா லவ் பண்ணுது.. ஸ்ரீகாந்த் இன்ஜினியரிங் படிக்கிறார்.. பார்வதி பட்டாசு பாக்டரில வேலை செய்யுது.. ஸ்ரீகாந்த் படிச்சு முடிச்சிட்டு ஊருக்கு வர்றார்.

ஸ்ரீகாந்தோட கிளாஸ்மேட், பார்வதி காதலிக்கரத ஸ்ரீகாந்த் கிட்ட சொல்லிடுது.. நடுவுல ஸ்ரீகாந்த் அவரோட நண்பர் வீட்டுக்கு போறார். அங்க அவரோட குழந்தைய பாக்குறார்.. மாமா பொண்ண கல்யாணம் பண்ணதால அந்த குழந்தை மனநிலை சரியில்லாம இருக்கு.. (ட்விஸ்ட்)
பார்வதிய கல்யாணம் பண்ணா இந்த மாதிரி ஆயிடுமோன்னு பயப்படறார்..

அவங்க அப்பா அவர தன்னோட முதலாளி பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்றார் (பணம் சார் பணம்). ஸ்ரீகாந்த் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிடறார்.. ஸ்ரீகாந்தோட அப்பா, மகன் தன்னை திட்டிட்டானே.. கனவெல்லாம் வீணாயிடுச்சேன்னு சரக்கு அடிச்சிட்டு தண்ணில விழறார்.. அப்புறம் அவர வீட்டுக்கு கூட்டி வந்து மருத்துவம் பாக்குறாங்க.. ஸ்ரீகாந்த் வேற வழி இல்லாம (தெரியல) அந்த முதலாளி பொன்னையே கல்யாணம் பண்ணிக்கறார்.

பார்வதியோட அண்ணன் பார்வதிக்கு ஒரு மளிகை கடைக்காரர கல்யாணம் பண்ணி வைக்கிறார். அவரும் பார்வதிய நல்ல பாத்துகிறார்..

பார்வதி ஊருக்கு வந்த ஸ்ரீகாந்த பாக்க போகுது.. அங்க அந்த புது பொண்ணு ஸ்ரீகாந்த கொஞ்சம் கூட மதிக்கறதே இல்லைங்கரத தெரிஞ்சுக்குது..

கடைசீல தங்கராசு (வேற யாரு ஸ்ரீகாந்த்தான்) வாழ்க்கை இப்படி போய்டுச்சேனு பயங்கரமா அழுவுது.. வெளிய ஸ்ரீகாந்தோட அப்பா பார்வதிய பாத்து அழறார்..

கேமரா, படம் முழுக்க பார்வதியவே சுத்தி சுத்தி வருது.. அதுவும் ஸ்ரீகாந்த வெறித்தனமா காதலிக்கறது சிலருக்கு யதார்த்தமா இருக்கலாம்.. எனக்கு கொஞ்சம் எரிச்சலாதான் இருந்திச்சு.. (யாருப்பா அது "வயித்தெரிச்சலா"-ன்னு கேக்குறது? என் மாமா பொண்ணு பார்வதியவிட அழகா இருப்பா..)

ஸ்ரீகாந்த் மொத்த படத்துல 15 நிமிசம் கூட வரல.. ஓரமா வந்துட்டு போய்டுறார்.. பாவம் நடிக்க சந்தர்ப்பமே இல்ல.. பார்வதி நடிப்பு சூப்பர்.. "ஆவாரம் பூ" பாடல் நல்லா இருக்கு.. பருத்தி வீரன் படத்தோட சாயல் நிறைய இடத்தில் தெரியுது...

எனக்கு பிடிச்ச சீன் : வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் ஸ்ரீகாந்த பாக்குறதுக்கு பார்வதி காத்திருக்கு.. அப்போ அதோட தோழி "இன்னுமா நீ தங்கராச மறக்கலன்னு?" கேக்குறதுக்கு "எதுக்கு மறக்கணும்?"ன்னு கேக்குறது மறக்க முடியாத காட்சி..

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பணக்காரங்க எல்லாம் மத்தவங்கள மதிக்க மாட்டாங்க.. ஏழைங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டு இருப்பாங்கன்னு தெரியலைங்க..

இந்த படத்துல என்ன மெசேஜ் சொல்ல வர்றாங்கன்னு புரியவே இல்ல.. (புரிஞ்சு மட்டும் என்ன பண்ண போறோம்?) அத்தை பொண்ண கல்யாணம் பண்ண கூடாதா? பணக்கார வீட்டு பொண்ண கல்யாணம் பண்ண கூடாதா?
எனக்கு புரிஞ்சது, "அப்பா சொல்றாங்கன்னு, வசதியான பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டா.. வசதி வரும்.. ஆனா வாழ்க்கை போய்டும்"..

மொத்தத்தில் "பூ" - கிராமத்து பூ - சிலருக்கு பிடிக்கும்..

அடுத்த பதிப்பில் சந்திப்போம்..

No comments: