Wednesday, January 7, 2009

திரை விமர்சனம் : திண்டுக்கல் சாரதி

இந்த கிறிஸ்துமஸ்-க்கு ஊருக்கு போயிருந்தேன்.. தியேட்டர்ல படம் பாத்து ரொம்ப நாள் ஆச்சே.. இந்த தடவை போலாம்ன்னு தம்பிகளை கூட்டிட்டு திண்டுக்கல் சாரதி பாக்க தாராபுரம் சத்யா தியேட்டர் போனேன்.. சன் டிவில வேற 10 நிமுசதுக்கு ஒரு தடவை போட்டு கொல்றாங்களே.. கருணாஸ் படமாச்சே கொஞ்சமாவது காமெடி இல்லாமயா போயிடும்தாங்க போனேன்..

DTS எபக்ட்ஸ்ல டைட்டில் போடும்போதே கொஞ்சம் டவுட் ஆச்சு.. சரி அப்படி என்னதான் சொல்றாங்கன்னு பாத்தா, மொத சீன்லயே கருனாச கோவில் யானை தூக்கிட்டு ஓடுதாம்.. அந்த ஊர்ல எல்லாரும் பயந்து ஒடுராங்கலாம்.. போலீஸ் (லிவிங்ஸ்டன்) மைக் எல்லாம் கட்டி அலப்பறை பண்றாங்களாம்.. இத சன் செய்திக்கு நிருபர் படம் பிடிக்கிறாராம்.. கடைசீல ஒரு பட்டாசு வெச்சு கருனாச காப்பாத்துறாங்க.. இது காமெடி-யாம்.. என் தம்பி வேற என்னை மொறைக்கிறான்..

கருணாஸ் ஒரு பிரஸ் நடத்துறார்.. அவர எல்லா பொண்ணுங்களும் வேணாம்னு சொல்லிடுது.. ஏன்னா அவரு கருப்பாம்.. அப்புறம் ஹீரோயின் வீட்டுக்கு போறாங்க.. அந்த அம்மா கருனாச பிடிச்சிருக்கு சொன்னதும் ஒரு டூயட்.. ( கொடுமைதான்) அதுக்கு அப்புறம்தான் ட்விஸ்ட்.. மனைவி கூட அஜித் படம் பாக்குறார்.. டென்சன் ஆகுறார்.. அப்புறம் மனைவிய சந்தேகபடறார்.. ஆஅவ்வ்வ்வ்... "அண்ணா, இதுக்கு பேசாம வீட்ல 'கோலங்கள்' பாத்திருக்கலாம்".. சொன்னது என்னோட தம்பி.. நானும் எவ்வளோ நேரம்தான் இண்ட்ரஸ்டா படம் பாக்குற மாதிரி நடிக்கறது..

அப்புறம் படம் சுத்து சுத்துனு சுத்துது.. கருணாஸ், அஜித் வீட்டுக்கலாம் போன் பண்ணி அழறார்.. (அம்மாடி முடியலைடா சாமி)
மனைவிக்கு பிடிக்கும்னு சரக்கு எல்லாம் அடிக்கறார்..
குத்து பாட்டு வேற.. (ரொம்ப முக்கியம்டா!!)
தம்பியவே சந்தேகப்படுறார்.. அம்மாவ அடிக்க போறார்..
மெண்டல் ஆஸ்பிட்டல்ல சர்டிபிகேட் வாங்கறார்..
கருணாஸ் கதை கேட்டு நடிச்சிருக்கலாம்.. நிறைய காமெடி பட்டாளம்.. ஆனாலும் எரிச்சல்தான் வருது..

ஒரு சீன்ல கருணாஸ் வாழை மரத்த பிடிச்சிட்டு அழறார்.. தியேட்டர்ல எல்லாரும் கப் சிப்.. என் தம்பி ( B.Sc. Vis Com. ) மட்டும் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.. !! :-)

பருத்திக்காடு பத்திக்கிச்சு பாடல் ஒ.கே.. மத்த பாட்டெல்லாம் தேறாது..

இதுக்கு மேல உங்களால படிக்க முடியாது.. என்னால எழுதவும் முடியாது..

நானும் ஆழ்வார், திருப்பதி மொக்கை படம் எல்லாம் பார்த்தேனுங்க.. ஆனா இந்த படத்துல மட்டும் பாதில எந்திருச்சி ஓடிரலாம்னு ஆயிடுச்சி.. அவ்ளோ மொக்கை..

ஒரு சீன்ல கருணாஸ் குப்பை காட்டுல நாய்கிட்ட கடி வாங்கறார் பாருங்க.. எனக்கு கண்ணுல கண்ணீரே வந்திருச்சி.. (பின்ன 150 ரூவான்னா சும்மாவா, படம் 10 ரூவாய்க்கு கூட போகாது)

சிம்ப்ளா சொல்லனும்னா ஒரு மெகா சீரியல சினிமா டைட்டில் போட்டு ரிலீஸ் பண்ணி இருக்காங்க.. உஷார் மச்சான் உஷார்..

மொத்தத்தில் "திண்டுக்கல் சாரதி" - வேணாம் விட்ருங்க..
அடுத்த பதிப்பில் சந்திப்போம்..

1 comment:

Anonymous said...

டேய் நீ இன்னும் திருந்தவே இல்லியா?

நடத்து மகனே நடத்து

இப்ப என்னடா சொல்ல வர்ற?