Tuesday, January 20, 2009

திரை விமர்சனம் : வில்லு

Villu எங்க ஊர்ல இருக்கறதே 3 தியேட்டர்.. பொங்கலுக்கு எந்த படத்துக்கு போலாம்னு கொஞ்சம் கண்பியுசன்.. வில்லு, படிக்காதவன்-ல, "வில்லு" போய் பாக்கலாம்னு கிளம்பிட்டோம்.. பாட்டெல்லாம் நல்லா இருக்கே, பிரபுதேவா கொஞ்சம் நல்லா பண்ணுவார்னு நம்பி போனோம்.. டைட்டில் முழுக்க MGR பாட்டை வெச்சி முடிச்சிட்டாங்க..

தாமு முதல் சீன்ல வந்து பாட்டிகிட்ட பேட்டி எடுக்கிறார்.. (ஹீரோ Intro) தமிழ் சினிமா விதிப்படி விஜய் வந்து 4 வில்லன்களிடமிருந்து ஒரு பொண்ணை காப்பாத்துறார் (இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சார் இந்த சீன் வைப்பீங்க?).. "ஸ்பைடர் மேனா? சூப்பர் மேனா? போக்கிரி மேன்.." (டயலாக்)வழக்கம் போல பாட்டு.. குஸ்பூ மாஸ்டர்!? வேற வந்து ஸ்க்ரீன் பூரா அடுறாங்கன்னா..

அப்புறம் போலீஸ் டாப் சீக்ரட் கேஸ் ஓபன் ஆகுது.. இன்டர்நேஷனல் வில்லன் தமிழ்நாட்டு கப்பல்ல வர்றார்..போலீஸ் அவரை ரவுண்ட் அப் பண்ணுறாங்க.. விஜய் போலீஸ்கிட்ட இருந்து அவர காப்பாத்தி கடலுக்குள்ள கூட்டிட்டு போறார்.. அப்புறம் தன்னோட நண்பர்கிட்ட (போலீஸ்) அவரை ஒப்படைக்கிறார்.. விஜய் லேப்டாப்-ல எதோ மெயில் படிக்கிறார்.. அப்புறம் ஒரு கிராமத்துக்கு கல்யாணத்துக்கு கிளம்புறார்.

வடிவேல் என்ட்ரி(அப்பாடா.. வந்துட்டான்யா.. வந்துட்டான்) கொஞ்ச நேரம் காமெடி.. அப்புறம் நயன்தாரா விஜய் கூட மோதல் அப்புறம் காதல்-ன்னு விழறாங்க (ஆவ்வ்..) வழக்கம் போல ஒரு டூயட்.. ரெண்டு பெரும் நயன்தாரா அப்பா பிரகாஷ் ராஜ்-கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க முனிச் (ஜெர்மனி) போறாங்க.. அங்க பிரகாஷ் ராஜ் அவரோட நண்பர்(தேவராஜ்)-கூட (ராக்கா) மாட்டிகிட்டதுக்கு சண்டை போடுறார், அப்புறம் சேர்ந்துக்கறார்.. விஜய் பிரகாஷ் ராஜ்-கிட்ட ராக்கா-வை நான்தான் கொன்னேன்-ன்னு சொல்றார் (போலீஸ்-கிட்ட ராக்காவோட பாடியே கிடைக்காம எப்படித்தான் ராக்கா செத்துட்டார்ன்னு எல்லாரும் நம்புறாங்க-ன்னு தெரியல).. விஜய், ரவுடி-ங்கள (ஸ்ரீமன், ஆனந்த ராஜ்) அடிக்கறார்.. தேவராஜ், விஜயை சுட்டு கொல்ல கிளம்புறார். அங்க அவரோட மனைவிய(விஜயோட அம்மா) பாக்குறார்.. அப்புறம் எல்லாரும் சேர்ந்துக்கறாங்க..

விஜயோட அப்பா அவரை ஒரு தீவுக்கு கூட்டி போய் ஒரு blue ray disk-a தர்றார்.. அதுல பிரகாஷ் ராஜோட எல்லா விஷயமும் இருக்காம்.. அதே மாதிரி இவரை பத்தின ஒரு டிஸ்க் தேவராஜ் கிட்ட இருக்கு..Villu

தீவுல இருந்து வரும்போது தேவராஜ் பெரிய பாறை-ல மோதி மண்டைய போடுறார்.. அதுக்குள்ளே விஜய் அப்பாவ விட்டுட்டு பாராசூட்டோட கடல்ல குதிச்சு தப்பிக்கிறார்.. அதே நேரம் நயன்தாரா அங்க படகுல வர்றாங்க.. (அவ்ளோ பெரிய அக்சிடன்ட், அவ்வளவு பக்கத்துல இருந்தும் நயன்தாராவுக்கு எப்படி தெரியாம போச்சுன்னு யார போய் கேக்குறது?)

அந்த blue ray டிஸ்க்-எ பிரகாஷ் ராஜ்கிட்ட தர்றார் விஜய்.. அப்புறம் நயந்தாரவ கல்யாணம் பண்ணி தர சொல்றார்.. இதை பார்த்த நயன்தாரா, ஓடி போய் விஜய் அம்மாகிட்ட இவரை பத்தி சொல்ல அந்த அம்மா ஆரம்பிக்குது பாருங்க ஒரு பிளாஸ்பேக் தமிழ் திரை உலக வரலாறுல அப்படி ஒன்ன யாரும் பாத்து இருக்க முடியாது..

விஜயோட உண்மையான அப்பா மேஜர் சரவணன் (வேற யாரு விஜய்தான்) ஒரு நேர்மையான ஆர்மி ஆபீசர். (என்னால சிரிப்ப அடக்கவே முடியலீங்கன்னா - அவர பாத்தா சிரிப்பு போலீஸ் மாதிரியே இருக்கு..) அவரோட மனைவி ரஞ்சிதா, மகன் விஜய். ஒரு ஆப்ரேசன்ல பெருசா?! சண்டை போட்டு ஒரு கூட்டத்த காப்பத்துறார் (எத்தன தடவைதான் இதவே பாக்குறது)..

விஜய் தலைமைல ஆயுதம்-லாம் ஒரு வண்டில கொண்டு போறாங்க.. வழில பிரகாஷ் ராஜ், சம்பத், மலைகோட்டை வில்லன் மூணு பேரும் விஜய் அடிச்சிட்டு ஆயுதத்த கடத்துறாங்க. விஜய்-எ கொலை பண்ணுறாங்க.. போலீஸ்-கிட்ட விஜய்தான் ஆயுதம் கடத்துனதா சொல்லிடறாங்க.. விஜய் மேல தேச துரோகி குற்றம் சாத்துறாங்க.. ரஞ்சிதாவ கொடுமை படுத்துறாங்க.. ரஞ்சிதா விஜய்-எ இந்த பிளாஷ்பேக் சொல்ற அம்மாகிட்ட கொடுத்து வளர்த்த சொல்றாங்க.. கடைசீல மகன் விஜய் பிரகாஷ் ராஜ் தவிர மத்த இரண்டு பேரையும் கொன்னுட்டு பிரகாஷ் ராஜ ரஞ்சிதாகிட்ட கூட்டிட்டு வர்றார்.. நடுவுல முதல் சீன்ல கடத்துன வில்லன் போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சு வர்றார்.. விஜய் அவரையும் கொன்னுடறார்..

அப்புறம் பிரகாஷ் ராஜ அடிச்சு ஊர் மக்கள் முன்னாடி உண்மைய சொல்ல வைக்கிறார்.. கடைசீல அவரையும் கொன்னுடறார்.. அவ்ளோதானாம் படம் முடிஞ்சிருச்சாம்.. நயன்தாரா என்ன ஆனாங்கன்னே தெரியலைங்கன்னா (ரொம்ப முக்கியம்!!)

படம் ரொம்ப சுமார்.. வடிவேலு கொஞ்சம் நேரம்தான் வர்றார்.. காமெடி ஒன்னும் பெருசா இல்ல.. கிராமத்துல மைக் செட்டு கட்டுரவர் எப்படி ஜெர்மனி வர்றார்-ன்னு பிரபு தேவா-கிட்ட யாராவது கேட்டு சொல்லுங்க..

பாடல்கள் எல்லாம் சூப்பர்.. நடனம் பாக்கலாம் (நயன்தாராவையும்).. படம் போக்கிரி, கில்லி அளவுக்கு இல்லைனாலும் குருவி, அழகிய தமிழ் மகனுக்கு பரவால்ல..

பிரபு தேவா கொஞ்சம் உஷாராகனும்.. போக்கிரி சாயல் நிறைய இடத்துல தெரியுது.. பிரகாஷ் ராஜ், ஆனந்த ராஜ், வடிவேல் இவங்களை எல்லாம் இன்னும் கொஞ்சம் நல்லா பயன்படுத்தி இருக்கலாம்..

மொத்தத்தில் வில்லு
- ஒரு தடவை பார்க்கலாம்..

அடுத்த பதிப்பில் சந்திப்போம்..


2 comments:

Cable Sankar said...

முதல்ல உங்க டெம்ப்ளேட்டை மாத்துங்க.. ஆரம்ப பாதி தெரியவே மாட்டேங்குது.

கிஷோர் said...

//நடனம் பாக்கலாம் (நயன்தாராவையும்).. //

பார்த்துடுவோம் :)